Friday, August 28, 2015

ஓணம் திருவிழா வரலாறு

கேரள தேசத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்திஅசுர குலத்தில் பிறந்திருந்தாலும், அவனது நல்லாட்சி,தேவர்களுக்கு மேலானவனாகஅவனை சீர்தூக்கி விட்டிருந்தது.
★இந்த நிலையில் நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றைநடத்த முன்வந்தான் மகாபலி சக்கரவர்த்தி.
★அந்த வேள்வியின்நடுவில் தானம் கேட்டு வரும் அனைவருக்கும் கேட்டதை தரும்சிறப்பான தருமத்தை செய்யவும் அவன்முடிவு செய்திருந்தான்.
★இதை அறிந்த தேவர்கள் கலங்கிப் போனார்கள்.ஏற்கனவே பல நற்காரியங்கள் செய்ததன் காரணமாகதேவர்களைப் போன்ற உயர்ந்த நிலைக்குமகாபலி சக்கரவர்த்தி வந்து விட்டான்.
★தற்போதுஅவன் நடத்தப் போகும் வேள்வியும், அதில் கொடுக்கப்போகும் தான தர்மங்களும் மூவுலகையும் ஆட்சி செய்யும்தகுதியை அவனுக்கு பெற்றுத் தந்துவிடும்.
★மூன்று உலகங்களிலும் அவனை வெல்ல எவராலும் முடியாதுஎன்ற நிலை உருவாகி விடும்.
★இதனால் தங்களின் பதவிக்குஆபத்து ஏற்பட்டு விடுமே என்று அஞ்சினர் தேவர்கள்.
★இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் தங்களைகாத்தருளும்படி மகாவிஷ்ணுவிடம் போய் நின்றனர்.
★தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்குஉதவ முன்வந்தார்,மகாவிஷ்ணுஅதே நேரத்தில் மகாபலியின் சிறப்பைஉலகம் அறியச்செய்யவும் அவர் சித்தம் கொண்டார்.
★வேள்வி நிறைவடையும் தறுவாயில வாமனர் (குள்ளமானஉருவம்) வடிவில் வந்து அரசனிடம்,
””என் உயரத்தை போன்றே இந்த உலகில் மூன்று அடி மண்கொடுத்தால் போதும்’
என்று தானம் கேட்டார்.
★அவனது குரு சுக்கிராச்சாரியாருக்கு தெரிந்துவிட்டது,வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பது. அதனால்தானம் தர வேண்டாம் என தடுத்தார்.
★மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி.
‘குருவே! என்னிடம்தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால்,இதைவிட பெரிய பேறு எனக்கு என்ன இருக்கப் போகிறது!’
★என்று கூறியவன், அத்துடன் நில்லாமல், கமண்டலத்தைஎடுத்து நீர் வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.
★இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்துமுதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம்அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்.
★பின்னர்மகாபலியிடம்,
‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும்இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’
★என்று கேட்டார்.
‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’
★என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.
★மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின்தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார்.
★சிறப்பு பெற்ற மகாபலி தொடர்ந்து
‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டைவளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும்உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கியதானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்றுஇருப்பாய்’
என்று அருளினார்.
★பாதாளத்திற்கு சென்ற மகாபலி சக்கரவர்த்தி,
‘திருமாலே!நான் என் நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் மிகுந்தபற்று வைத்திருக்கிறேன். அதைத் தாங்களும் அறிவீர்கள்.எனவே வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நான் என் நாட்டிற்குவந்து என் மக்களின் சிறந்த வாழ்க்கையை பார்க்க அனுமதிக்கவேண்டுகிறேன்’
என்றான்.
‘அப்படியே ஆகட்டும்’ என்று ஒப்புதல் அளித்தார் மகாவிஷ்ணு.
★அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணநட்சத்திரத் திருநாள் அன்று மகாபலி சக்கரவர்த்தி தன்னுடையநாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருகிறார்.
★அவரை வரவேற்கும் விதமாகவே கேரள மக்கள் 10 நாட்கள்திருவிழாவாக ஓணம் பண்டிகையை நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment