Monday, August 24, 2015

ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் ?




ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும் ?
ருத்ராட்சம் அணிந்தால் என்ன கிடைக்கும் ?
( ஈசன் திருவருளால் ருத்ராட்சம் அணிந்தால் உணர்ந்த பதிவு )
ருத்ராட்சம் அணியவேண்டும் என்ற எண்ணம் தோன்ற காரணமே ஈசன் கருணை தான், நம்மிள் உள்ள பலவிதமான குறைகளை சரி செய்து நம்மையும் ஆட்கொள்ள வேண்டி தான், கருணைக்கடலான எம்பெருமான் ஈசன் நமக்கு அந்த எண்ணம் தோன்ற வைத்தார்.
உலகில் எத்தனையோ பேர் இருக்க நம்மை போல் சிலருக்கு மட்டும் இந்த எண்ணம் வர காரணம் ஈசன் கருணை மட்டுமே.
ருத்ராட்சதில் ஒரு அதிர்வலை ஓடிக்கொண்டு இருக்கிறது, அதை நாம் அணியும்போது நமது உடலிலும், அதன் தாக்கம் வெளிப்பட்டு நமது உடலில் NEGATIVE ENERGY – POSITIVE ENERGY ஆகா மாற்றுகிறது.
ருத்ராட்சம் அணிந்தால் யமக்கு கிட்டியது
1. ருத்ராட்சதை உடலில் உணரும்போது சிவ சிந்தனைகள் எழும்.
2. மற்றவர்கள் நம்மை பார்க்கும் நோக்கம் நம்மை பாதிக்காது.
3. எதிர்மறை எண்ணங்கள் மறையும்.
4. ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஆழ்ந்து நோக்கும் தன்மை.
5. நிதானமாகவும் தெளிவாகவும் செய்யும் திறன்.
6. வேண்டாத பழக்கம் நம்மை விட்டு தாமே விலகும் நிலை.
7. எதிலும் ஒரு திருப்தி.
8. நம்மை வழிநடத்த பல உணர்வுகள்.
9. நாம் நிலைமை மேன்மை அடையும் உணர்வு.
1௦. பிறர்க்கு உதவும் மனப்பான்மை.
11. நமக்கு துன்பம் என்று வரும்போது அதை களைய உடனே உதவி,
தீமைகள் அணுகாது, துன்பம் வரும் முன் உணரும் தன்மை என்று பல பல,
## உலகிலே தீட்டு ஆனா இடம் நாம் பெருமான் இருக்கும் சுடுகாடு, ஆதலால் ருத்ராட்சம் அணிய எந்த ஒரு தீட்டும் இல்லை, ஆண் பெண் அலி என்று எந்த பேதமும் இல்லாதவன் நாம் கருணை கடவுள் ஆதலால் அனைவரும் அணியலாம் ##
ஈசன் திருவருளால் மட்டுமே தோன்றிய பதிவு – யாருக்கு உணர்த்த என்று ஈசன் மட்டுமே அறிவான்.
நமச்சிவாய 

No comments:

Post a Comment