Tuesday, August 11, 2015

அகோரிகள் வணங்கத் தகுந்தோரே



அகோரிகள் என்றாலே நம்மில்பலருக்கு பலவகையானகருத்து உண்டு.புத்தகங்கள் ,ஊடகங்கள் ,இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாகஅவர்களை பற்றி அறிந்திருப்போம்.சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பானசெய்திகளும் வருவதுண்டு.உண்மையில் அகோரிகள் என்பவர்யார் ?அவர்களை பற்றி நான் அறிந்ததகவல்.உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்டமுடியுடன்.முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.தலை பகுதிகள் தவிர பிறஇடங்களில் இவர்களுக்கு முடிகள்இருக்காது. இவர்கள்உலகை வெறுத்து தனியாகவாழ்பவர்கள் கிடையாது.சிறு சிறு குழுக்களாகவும்தலைமை யோகியின் பின்னால்இவர்கள் இருப்பார்கள்.தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ,தங்களுக்கு இருக்கும் அமானுஷஆற்றலை வெளிகாண்பிக்கவோமாட்டார்கள் .உடல் முழுவதும் சாம்பல்அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள் .மத பொருட்கள் எதையும் கைகளில்வைத்திருக்க மாட்டார்கள்.அகோரிகள் குழுக்களாகஇருக்கும் சூழலில் யார்தலைமை யோகி அல்லது குரு எனகண்டறிவது சிரமம்.அனைவரும்ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும்பெண் அகோரிகள் இருவரும்இருப்பர்கள்.நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.இவர்களின் தலைமுடி வயதானாலும்வெள்ளை ஆகாது. உடல்பயில்வானை போலஇல்லாமல்,உடல் சீரான நிலையில்இருக்கும்.ரிஷிகேசம் அல்லது இமாலயமலையின் வனங்களில் இருப்பார்கள்.பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்குவந்து கூடுவார்கள்.இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள்,மீண்டும்நடந்தே சென்றுவிடுவார்கள்.வாகனத்தை பயன்படுத்தமாட்டார்கள்.வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம்பன்னிரெண்டு மணி நேர பயணம்.ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்பொழுது கட்டுகோப்பாகவரிசையில் செல்வார்கள். வரிசையின்முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாகஇருப்பார்கள். நீண்ட முடியும்,மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும்அவர்கள் மேல் எந்த விதமானவாசனையும் இருக்காது. நறுமணமும்இருக்காது,நாற்றமும் இருக்கது.முக்கியமாக இவர்கள் பிறருடன்பேசுவது குறைவு.தங்களுக்குள்பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.குழுவாக வட்டவடிவில்உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள்.இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள்.கும்பமேளாவில்கஞ்சா எல்லாஇடத்திலும்கிடைக்கும், சிலர் இலவசமாகபிறருக்கு வழங்குவார்கள்.ஆனால் இவர்களிடம் யாரும்கொடுக்க மாட்டார்கள், இவர்களும்வாங்க மாட்டார்கள். தாங்கள்இருக்கும் வனத்திலிருந்து சிலமூலிகைகளை கொண்டுவருவார்கள்.வட்டமாக உட்கார்ந்திருக்கும்இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்தமூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள்.மூலிகை குழாயில்வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள்.பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள்.இப்படியாக வட்டம் முழுவதும்புகைகுழாய் வட்டமடிக்கும்.ரிஷிகேசத்திலும்,கும்ப மேளாவிலும் 1டிகிரி செண்டிகிரேட் குளிராகஇருந்தாலும் நிர்வாணமாகஉற்கார்ந்து தியானம்செய்வார்கள்.இப்படி பட்டயோகிகளை புரிந்து கொள்வது கடினம்.இமாலய மலை பகுதிகளில்( யமுனோத்தரி,கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின்முக்கிய இடமாக இருக்கிறது.கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாகவெளியே வலம் வருவதில்லை.குழுவிலிருந்து தனியே சிலபணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம்.எந்த ஊருக்கு சென்றாலும் நாம்ஹோட்டலை தேடுவது போலஇவர்கள் மயானத்தில்இருப்பதை விரும்புவார்கள்.அகோரிகளுக்கு தங்கள்உடலின் சக்தி நிலை மிகவும்முக்கியமானது. இங்கே உடல் சக்தி எனகுறிப்பிடுவது பூஸ்ட்,காம்ளாண்குடித்து வருவதில்லை. யோகசக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும்இழக்க அவர்கள் தயாரக இருக்கமாட்டார்கள்.இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி.மயானம்,ஆறு மற்றும் வனங்களில் தங்கள்உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும்பொழுது சூட்சமமாகசெயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்கநிகழ்வு.பூமியில் வேறு எந்தபகுதியிலும் நிகழாதவண்ணம்அதிக மக்கள் கூடும்ஒரே விழா கும்பமேளா.2007ஆம் ஆண்டு நடைபெற்றகும்பமேளாவில்ஒரு கோடிக்கும் மேலாக மக்கள்கலந்து கொண்டார்களாம்.அழைப்பிதல் இல்லை,அமைப்பாளர்கள் இல்லை,தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க ,இந்த விழா எப்படி சிறப்பாகநடைபெறுகிறது?ஏதோ ஒரு சூட்சுமசக்தி அனைவரையும்வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள்இணையும் இடத்தில் உணவுக்கோ,தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை.உயிர்சேதம் இல்லை.யாரோ ஒருவர் பெரிய லாரியில்கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும்இலவசமாக தானம் செய்கிறார்.மற்றொருவரோ அனைவருக்கும்உணவுபொட்டலங்களைவினியோகம்செய்கிறார்.இவர்களை தூண்டியது எந்த சக்தி?தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும்,வைராக்கியமும்அலாதியானது. தங்கள்குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்கமாட்டார்கள்.அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும்முறை விசித்திரமானது.புதியதலைவரை வணங்கிவிட்டு , பழையதலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்­…!காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போலஉலகிற்கே ஒரு மயானம்என்றால் அது காசி எனசொல்லலாம். தினமும் சராசரியாகஎழுநூறு முதல் ஆயிரம்பிணங்கள் எரிக்கப்படுகிறது.சன்யாசிகள், யோகிகள்,தாந்திரீகர்கள்,மாந்திரீகம் செய்பவர்கள் எனஅங்கே கூட்டம் அதிகம்.காக்கி சட்டையில் வரும்ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல,மக்கள் அகோரிகளுக்கும்மாந்திரீகர்களுக்கும்வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில்அடைத்துவிடுவார்கள்.மேலைநாட்டுகாரர்களுக்­­­கு இந்தியாவில் நரமாமிசம்சாப்பிடும் மாந்திரீகர்களை படம்பிடித்து அவர்களை நாகசன்யாசிகள், அகோரிகள் எனகூறிவது வருந் ததக்கதுஅகோரிகள் மயானத்தில் தியானம்செய்வார்கள், எரியும் உடல் மேல்அமர்ந்து தியானிப்பார்கள்.ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள்.உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சிலமூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள்.உடலில் எந்த ஒரு மதசின்னங்களோ அடையாளமோ இருக்காது.ருத்திராட்சம் , சங்கு மற்றும்ஆயுதம் இவற்றில்ஏதாவது ஒன்று கைகளில்வைத்திருப்பார்கள்.ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள்.தலை மூடி நீண்டு இருக்குமே தவிரமுகத்திலும்,மார்ப்பிலும் முடி இருக்காது.கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள்.உடை உடுத்துவது இவர்கள்மரபு அல்ல .( நிர்வாணத்திற்கான காரணம் ஆசை ,பாசம் ,பொருள்ஆடை என்று எல்லாவற்றையும்கடந்து பிறவிச்சுழற்சியிலிரு­யந்து விடுதலை அடைந்து முற்றும்துறந்த நிலை என்று கூறலாம்.).சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிரபிற நாட்களில் / இடங்களில் பூசமாட்டார்கள்.

No comments:

Post a Comment